என்னா அடி என்னா அடி ஆடவைக்கும் தப்பாட்டம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சம வைரலாக பரவி வருகிறது.
தமிழனின் இசை கலைகளில் ஒன்று தப்பாட்டம். இதனை பறையாட்டம் என்றும் கூறுவார்கள். பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.
ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம்தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.
இப்படி பெயர் போன தப்பாட்டத்தை இசைக்குழு ஒன்று அடித்து அசத்திய வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று செம வைரலாக பரவி வருகிறது. இசைக்குழு இசைத்த வீடியோவை இணையத்தில் கண்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை அந்த இசைக் குழுவுக்கு பரிசாக வழங்கி வருகின்றனர்.
இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.